ETV Bharat / bharat

ஹிஜாப் அணியவில்லை என்றால் பாலியல் தொல்லை ஏற்படும் - காங்கிரஸ் எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

author img

By

Published : Feb 14, 2022, 12:55 PM IST

Zameer Ahmed
Zameer Ahmed

இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்தால் அவர்களை யாரும் பாலியல் ரீதியாக துன்புறுத்த மாட்டார்கள் என கர்நாடகா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ கருத்து தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வருவது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பேசு பொருளாக அமைந்துள்ளது.

கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் இவ்விவகாரம் தொடர்பாக பேசுகையில், ஹிஜாப் அணியும் வழக்கம் குறித்து குரானில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, இஸ்லாமில் ஹிஜாப் என்பது கட்டாயம் இல்லை எனத் தெரிவித்தார்.

ஆரிஃப்பின் இந்த கருத்துக்கு பதில் தரும் விதமாக கர்நாடகா மாநில காங்கிரஸ் பிரமுகரும், எம்.எல்.ஏவுமான சமீர் அகமது, ஹிஜாப் என்றால் இஸ்லாமில் பர்தா என்று அர்த்தம். பெண்கள் பெரியவர்களாக வளர்ந்த பின்னர், தங்கள் முகத்தை மூடி அழகை மறைத்துக்கொள்ள வேண்டும். உலகில் அதிக பாலியல் குற்றங்கள் இந்தியாவில் தான் காணப்படுகிறது.

காரணம் பெண்கள் தங்கள் முகங்களை மறைப்பதில்லை. இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்தால் அவர்களை யாரும் பாலியல் ரீதியாக துன்புறுத்த மாட்டார்கள் எனக் கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இக்கருத்துக்கு பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: தேச பாதுகாப்பை அச்சுறுத்தும் 54 சீன செயலிகளுக்குத் தடை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.