உத்தரகாண்ட் வெள்ளம்: பலி எண்ணிக்கை 68ஆக உயர்வு; 134 பேர் மாயம்

author img

By

Published : Feb 23, 2021, 4:42 PM IST

Uttarakhand

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68ஆக அதிகரித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில் உள்ள தபோவன்-ரேனி பகுதியில் பிப்.7ஆம் தேதி காலை பனிப்பாறைகள் திடீரென உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு ரிஷிகங்கா மின்திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அப்பகுதியில் வசித்தவர்களின் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இந்த பாதிப்பில் 206க்கும் மேற்பட்டோர் சிக்கியதாக கூறப்படுகிறது. அதில், இதுவரை 68 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. அதில் 29 பேரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

மீதமுள்ள 134 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ள காவல்துறை, புனரமைப்புப் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் எனத் தெரிவித்துள்ளது. இந்த மீட்புப்பணியில் உத்தரகாண்ட் மாநிலக் காவல்துறையுடன் இணைந்து இந்தோ-திபெத் எல்லைக் காவல்படையும் ஈடுபட்டுவருகிறது.

இதையும் படிங்க: உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கிறார் ராம்நாத் கோவிந்த்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.