ETV Bharat / bharat

இந்தியக்கடல் பகுதியில் 2 பாகிஸ்தான் மீனவர்கள் கைது!

author img

By

Published : Oct 11, 2022, 10:28 PM IST

GUJARAT
GUJARAT

குஜராத்தின் கட்ச் கடல் பகுதியில், இரண்டு பாகிஸ்தான் மீனவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

அகமதாபாத்: குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில், இந்தியா - பாகிஸ்தான் கடல் எல்லைப் பகுதியில் இந்திய விமானப்படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இப்போது கட்ச் கடல் பகுதியிலிருந்து இரண்டு பாகிஸ்தான் மீனவர்களை எல்லை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாசின் ஷேக்(35) மற்றும் முகமது ஷேக்(25) என்றும், இருவரும் பாகிஸ்தானின் சுஜாவலி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. ஹராமி நாலா கட்ச் பகுதியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் கட்ச் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் மீன்பிடி படகு ஒன்றை எல்லை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். எனினும், அந்த படகிலிருந்த மீனவர்கள் தப்பியோடிவிட்டனர்.

இதையும் படிங்க: கங்கையில் தவறி விழுந்து 40 கி.மீ. அடித்துச்செல்லப்பட்டும் உயிர்தப்பிய மூதாட்டி..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.