ETV Bharat / bharat

பாலியல் தொழிலுக்காக பங்களாதேஷ் சிறுமி கடத்தல்? - ஒரு பெண் உள்பட மூவர் கைது

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 4:31 PM IST

Etv Bharat
Etv Bharat

Three arrested for allegedly luring minor Bangladeshi girl: மேற்குவங்கத்தில் பாலியல் தொழிலில் சிறுமியை ஈடுபடுத்த முயன்றதாக ஒரு பெண் உள்பட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்து உள்ளனர்.

துர்காபூர் (மேற்குவங்கம்): மேற்குவங்க மாநிலம் துர்காபூர் காவல் துறையினர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிறுமியை கடத்தியது தொடர்பாக மூன்று பேரை கைது செய்து உள்ளனர். இதனையடுத்து, கைது செய்த சிறுமியிடம் இருந்து காவல் துறையினர் வாக்குமூலம் பெற்று உள்ளனர்.

முன்னதாக, நேற்று (ஆகஸ்ட் 28) பிற்பகல் பந்தன்பள்ளி பகுதியில் சிறுமி சுற்றித் திரிவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்து உள்ளது. அது மட்டுமல்லாமல், மேற்கு புர்துவானின் துர்காபூர் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட பாலியல் தொழில் நடக்கும் இடத்தில் இருந்து சிறுமி மீட்கப்பட்டு உள்ளார்.

அங்கு இருந்து சிறுமியை மீட்ட மற்ற பெண்கள், சிறுமியை முதலில் துர்பார் மஹிளா சமிதி அலுவலகத்தில் ஒப்படைத்து உள்ளனர். பின்னர், அவர்கள் துர்காபூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்க, காவல் துறையினர் வந்து சிறுமியை மீட்டு உள்ளனர். பின்னர் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், பங்களாதேஷைச் சேர்ந்த சிறுமி, துர்காபூரில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்வதற்காக அழைத்து வரப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், சாய்னு பாய் என்ற பெண்ணின் வீட்டில் சிறுமி வைக்கப்பட்டு உள்ளார். சாய்னு பாய்க்கு பாலியல் தொழிலில் பழக்கம் இருந்து உள்ளது. இதனையடுத்து, சாய்னு பாயின் கணவர் முஸ்தக் அகமது மற்றும் பப்பு என்ற இளைஞர் ஆகியோர் சிறுமியை பாலியல் தொழில் நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்து உள்ளனர்.

மேலும், இதற்கு பல மாதங்களுக்கு முன்னதாக சிறுமி, துர்காபூரில் உள்ள அழகு நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு, அங்கு இருந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார். இதனையடுத்து, பாலியல் தொழில் நடைபெறும் இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், சாய்னு பாயிடம் விசாரணை மேற்கொண்டு, அவரை கைது செய்து உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சாய்னு பாயின் கணவர் மற்றும் மற்றொரு இளைஞரை கான்க்‌ஷா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பனாகர் பகுதியில் வைத்து காவல் துறையினர் கைது செய்து உள்ளனர். மேலும், இது தொடர்பாக துர்காபூர் ஏசிபி டதகட்டா பாண்டே கூறுகையில், “ஒரு சிறுமியை காவல் துறையினர் மீட்டு உள்ளனர். அவர், பங்களாதேஷைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுகிறார். இதற்கு பின்னால் ஒரு மிகப்பெரிய கும்பல் செயல்படுகிறது.

தற்போது அந்த கும்பலில் உள்ள 3 பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துர்காபூர் சப்-டிவிஷ்னல் நீதிமன்றத்தில் சிறுமி உள்பட நான்கு பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கணவனை கொன்றுவிட்டு பலே நாடகம்.. முறையற்ற உறவால் விபரீதம்.. பலே பெண் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.