ETV Bharat / bharat

என்னா அடி... பெண்ணிடம் செயின் பறித்த வடஇந்திய இளைஞரை வெளுத்துவாங்கிய மக்கள்!

author img

By

Published : May 23, 2022, 4:33 PM IST

என்னா தரமான அடி..!பெண்ணிடம் தங்கசெயின் பறித்த வட இந்தியா வாலிபரை வெளுத்து வாங்கிய போது மக்கள்!
என்னா தரமான அடி..!பெண்ணிடம் தங்கசெயின் பறித்த வட இந்தியா வாலிபரை வெளுத்து வாங்கிய போது மக்கள்!

புதுச்சேரியில் பெண்ணிடம் தங்கசெயின் பறித்த வட இந்தியா வாலிபரை மக்கள் பிடித்து தர்ம அடி பின்னர் தகவல் கிடைத்து ஒதியன்சாலை காவல்துரையினர் விரைந்து வந்து திருடனை கைது செய்தனர்.

புதுச்சேரி அருகே உள்ள ஆட்டுப்பட்டி பகுதியில் நேற்று (மே22) இரவு பெண் ஒருவரின் தங்க செயினை ஒருவர் பறித்து கொண்டு ஓடியுள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் விரட்டிச் சென்று பிடித்து, தர்ம அடி கொடுத்தனர். பின்பு அப்பகுதியில் இருளாக இருந்ததால் அவன் தப்பித்து அருகே உள்ள பாலம் வேலை நடக்கும் பகுதிக்கு சென்று மறைந்துகொண்டான்.

அதற்குள் தகவல் கிடைத்து ஒதியன்சாலை போலீசார் விரைந்து வர பாலத்தின் அடியில் மறைந்திருந்த திருடனை இளைஞர்களே வெளியே தூக்கிக்கொண்டு வந்தனர். ஆனால், அவன் மயக்கத்தில் இருப்பது போல் நடித்தான். இதனால் வெளிச்சமான பகுதிக்கு அவனை இளைஞர்கள் தூக்கி வந்தனர்.பின்பு திருடன் முகத்தில் தண்ணீர் ஊற்றிய போது எழுந்தான்.

என்னா தரமான அடி..!பெண்ணிடம் தங்கசெயின் பறித்த வட இந்தியா வாலிபரை வெளுத்து வாங்கிய பொதுமக்கள்!

அங்கிருந்த போலீசார் 'இளைஞர்கள் யாரும் இவனை அடிக்கக்கூடாது’ எனக் கூறியதுடன், அவன் வடமாநிலத்தைச் சார்ந்தவன் என அறிந்து இந்தியில் பேசி ’சங்கிலி திருடியது அவன் தான் என்பதை உறுதி செய்து’ காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

இதையும் படிங்க:ராஜஸ்தானில் கை வைரிசை காட்டிய வேலூர் பாய்ஸ் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.