ETV Bharat / bharat

சொத்துக்குவிப்பு வழக்கில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2023, 5:56 PM IST

supreme-court-issues-notice-to-andhra-pradesh-cm-on-plea-for-cancelling-his-bail-in-da-case
சொத்துக்குவிப்பு வழக்கில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பியது உச்ச நீதிமன்றம்!

Andhra Pradesh CM Y.S. Jagan Mohan Reddy: ஆந்திரப் பிரதேசம் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தெலங்கானா உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரிய சிபிஐயின் மேல்முறையீட்டு மனுவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி: ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தெலங்கானா உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரிய சிபிஐ தாக்கல் செய்த மனுவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்து ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி 2014ஆம் ஆண்டு அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டியுடன் இணைந்து முதலமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி சட்ட விரோதமாகச் சொத்துக்கள் சேர்த்ததாகவும், இருவரும் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் சிபிஐ விசாரணை மேற்கொண்டது.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் தற்போதைய ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஜாமீன் மற்றும் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டது. இதனையடுத்து சிபிஐ தரப்பில், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் பங்கஜ் மித்தல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கில் விசாரணையின் காலதாமதம் குறித்து கேள்வி எழுப்பினர். மேலும், சிபிஐ தரப்பில், குற்றம் சாட்டப்பட்டவர் ஆந்திராவின் முதலமைச்சராக இருப்பதால் இந்த வழக்கில் பல்வேறு தலையீடுகள் இருப்பதாகவும், 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை அரசு பணத்தில் சொத்துகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து அந்திரப் பிரதேச முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டிக்கும், வழக்கு தாமதம் குறித்து விளக்கம் கேட்டு சிபிஐக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு நாளை வாக்குப்பதிவு! முன்னேற்பாடுகள் தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.