ETV Bharat / bharat

டார்பிடோ சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி

author img

By

Published : Dec 14, 2021, 9:16 PM IST

Supersonic missile
Supersonic missile

ஒடிசாவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தொலைதூர டார்பிடோ சூப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது.

புவனேஸ்வர்: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய சூப்பர்சோனிக் ஏவுகணை ஒடிசா மாநிலத்தில் உள்ள வீலர் தீவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. சோதனையின் போது, ஏவுகணையின் முழு திறனும் நிரூபிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை அமைப்பின் மூலம் நீர்மூழ்கி டார்பிடோக்கள் கூடுதல் வேகத்துடன் இலக்கை எட்டிவிடும். பொதுவாக ஒரு நீர் மூழ்கிக் கப்பலிலிருந்து மாற்றொரு நீர்மூழ்கி கப்பலையோ அல்லது மேற்பரப்பிலிருக்கும் கப்பலையோ தாக்க டார்பிடோ வெடிகுண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த டார்பிடோக்கள் அதிக எடைகொண்டதாக இருக்கும் என்பதால், செலுத்தும் போது இணை ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அமைப்பின் வேகத்தை அதிகரிக்கவே சூப்பர்சோனிக் இணை ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டுவந்தன. இந்த சூப்பர்சோனிக் இணை ஏவுகணை அமைப்பு அடுத்த தலைமுறை அமைப்பாகும்.

இதையும் படிங்க: இந்தியா 2020: வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட ஏவுகணைகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.