ETV Bharat / bharat

டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு

author img

By

Published : Sep 4, 2022, 1:10 PM IST

டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 6 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Sixth
Sixth

டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 22 வயதான ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண்ணுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தனி வார்டில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

அவர் அண்மையில் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை டெல்லியில் 6 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஜூலை 24ஆம் தேதி டெல்லியில் முதல் குரங்கம்மை பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படிங்க:குரங்கம்மை தொற்று 20 விழுக்காடு அதிகரிப்பு... 92 நாடுகளில் பரவல்... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.