ETV Bharat / bharat

ஜனநாயகம் குறித்து கூடுதல் ஆட்சியர் சர்ச்சை பேச்சு: வீடியோ வைரல்!

author img

By

Published : Jul 13, 2022, 8:10 PM IST

கூடுதல் ஆட்சியர் சர்ச்சை பேச்சு
கூடுதல் ஆட்சியர் சர்ச்சை பேச்சு

"ஜனநாயகம் நாட்டின் மிகப்பெரிய தவறு, வாக்களித்து எத்தனை ஊழல் தலைவர்களை உருவாக்கியுள்ளீர்கள்?" என மத்திய பிரதேசம் ஷிவ்புரி கூடுதல் ஆட்சியர் பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் வைராகியுள்ளது.

ஷிவ்புரி (மத்திய பிரதேசம்): மத்திய பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் நேற்று (ஜூலை 12) நடைபெற்றது. தேர்தல் குறித்து ஆலோசிக்க அலுவலர்கள் , ஷிவ்புரி மாவட்ட கூடுதல் ஆட்சியரும், மாவட்ட துணைத் தேர்தல் அலுவலருமான உமேஷ் பிரகாஷ் சுக்லாவை சந்தித்துள்ளனர். அங்கு அவர் பேசிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், " வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காததால் என்ன இப்போது? இன்று வரை வாக்களித்து என்ன செய்தீர்கள்? எத்தனை ஊழல் தலைவர்களை உருவாக்கியுள்ளீர்கள்? ஜனநாயகம் நாட்டின் மிகப்பெரிய தவறு" என்று அதில் பதிவாகி உள்ளது.

இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கேட்க அவரை தொடர்பு கொண்டபோது பதில் இல்லை. அதனால் இந்த வீடியோ அவர் பேசியது தானா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

இதையும் படிங்க: போதைப்பொருள் தயாரிக்கும் இரு பெண்கள், வைரல் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.