ETV Bharat / bharat

வன்னியர் உள் இடஒதுக்கீடு ரத்து செல்லும்- உச்ச நீதிமன்றம்

author img

By

Published : Mar 31, 2022, 11:37 AM IST

Updated : Mar 31, 2022, 12:00 PM IST

SC
SC

வன்னியர் இடஒதுக்கீடு ரத்து செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையும் ரத்தாகிறது.

புது டெல்லி : கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையையும் ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது வன்னியர் சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்து உத்தரவிட்டார்.

இது குறித்து அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு அளிக்கப்பட்ட 10.5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து பாமக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ் மற்றும் பி.ஆர். கவாய் ஆகியோர் இன்று (மார்ச் 31) தீர்ப்பளித்தனர்.

அந்தத் தீர்ப்பில், “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு அளித்தது செல்லாது. இடஒதுக்கீடு அளிப்பதில் அறிவியல் முறை பின்பற்றப்பட வேண்டும் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இதனால் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10.5 சதவீத இடஒதுக்கீடு அளித்து அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட அரசாணையும் ரத்து ஆகிறது.

Last Updated :Mar 31, 2022, 12:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.