ETV Bharat / bharat

உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தான கவுடர் மறைவு!

author img

By

Published : Apr 25, 2021, 7:16 AM IST

Shantanagoudar
சந்தான கவுடர்

உச்ச நீதிமன்ற நீதிபதி மோகன் எம் சந்தான கவுடர் (62), உடல் நலக் குறைவு காரணமாக குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி மோகன் எம். சந்தான கவுடர், நேற்றிரவு உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். அவருக்கு வயது 62. குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில், நுரையீரல் தொற்று காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த அவர், நள்ளிரவு 12.30 மணியளவில் உயிரிழந்தார். நீதிபதிக்கு கரோனா தொற்று இருந்ததா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

அவரது மறைவுக்குப் பலர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இவர் 2017 பிப்ரவரி 17ஆம் தேதியன்று, உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.

1958இல் கர்நாடகாவில் பிறந்த இவர், 1980இல் வழக்கறிஞர் பணியில் சேர்ந்தார். 2003இல் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, அடுத்த ஆண்டே நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதி ஆனார்.

பின்னர் 2016இல், அவர் கேரள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் செயல் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்படுவதற்கு முன்பு, கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆக்ஸிஜன் சப்ளை நிறுத்தம்: 2 கரோனா நோயாளிகள் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.