ETV Bharat / bharat

Parliament Adjourned : எதிர்க்கட்சிகள் தொடர் அமளி.. மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு!

author img

By

Published : Aug 7, 2023, 12:28 PM IST

எதிர்க்கட்சிகள் தொடர் அமளியை தொடர்ந்து மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Manipur
Manipur

டெல்லி : எதிர்க்கட்சிகள் தொடர் அமளியை தொடர்ந்து மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் அது முதலே மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

மணிப்பூர் கலவரம் குறித்தும் குக்கி இனத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் ஊர்வலமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டது குறித்தும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல், மணிப்பூர் விவகாரம் குறித்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்க தயார் என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருந்தார். இருப்பினும் அதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

இதனிடையே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நாளை (ஆகஸ்ட். 8) முதல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட். 7) வழக்கம் போல் மாநிலங்களவை கூட்டம் தொடங்கியது.

டெல்லி சேவைகள் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்ய இருந்தார். அதேநேரம் கூட்டம் தொடங்கியதுமே எதிர்க்கட்சிகள், காங்கிரஸ் எம்.பி. ரஜனி அசோக்ராவ் பாட்டீல் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக முறையிட்டனர்.

இதனிடையே மாநிலங்களவை தலைவர் பியூஷ் கோயல், எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான விவாதங்களை மேற்கொள்ள விரும்பவில்லை என்றும் அமளியில் ஈடுபட்டு அவை தொந்தரவுக்கு ஆளாக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். எதிரக்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில், மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மதியம் 2 மணி வரை அவையை ஒத்திவைத்தார்.

நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் இறுதி வாரத்தை நெருங்கி உள்ள நிலையில், டெல்லி சேவைகள் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி.பதவி - நாளைய விவாதத்தில் பங்கேற்கிறார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.