ETV Bharat / bharat

ராஜஸ்தான் அமைச்சர் பதவி நீக்கம் - நீடிக்கும் பாஜக - காங்கிரஸ் வார்த்தைப்போர்!

author img

By

Published : Jul 22, 2023, 4:11 PM IST

Updated : Jul 22, 2023, 5:45 PM IST

Etv Bharat
Etv Bharat

ராஜஸ்தான் அமைச்சர் ராஜேந்திர குதாவை (Rajendra Gudha) அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டது குறித்து, பாஜக - காங்கிரஸ் இடையே தொடர்ந்து வார்த்தைப் போர் நிலவி வருகிறது.

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அசோக் கெலாட்டின் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து, ஊர்க்காவல் படை மற்றும் சிவில் பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜேந்திர குதா பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், ராஜஸ்தானில் பெண்களின் நிலை மற்றும் சட்டம் - ஒழுங்கு குறித்து பேசியதாக ராஜேந்திர குதா அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

இதற்கான பரிந்துரையை அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஷ்ராவிடம் நேற்று (ஜூலை 21) வழங்கப்பட்ட நிலையில், உடனடியாக இந்தப் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ராஜேந்திர குதா முன்னதாகவே அமைச்சரவையில் இருந்து நீக்கி இருக்க வேண்டும் என பாஜக தெரிவித்து வருகிறது. மேலும், நீக்கம் செய்யப்பட்ட குதா, மணிப்பூர் வன்முறைச் சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் போராட்டம் நடத்தி உள்ளார்.

இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் இணை பொறுப்பாளர் அமிர்தா தவான் கூறுகையில், “ராஜஸ்தான் மாநில அமைச்சரவையில் இருந்து ராஜேந்திர குதா முன்னதாகவே நீக்கம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். முன்னதாக, கடவுளாக போற்றப்படும் ‘சீதா’ குறித்து ராஜேந்திர குதா பேசியதை கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை.

காங்கிரஸின் அங்கமாக இருந்து கொண்டு, பாஜகவின் மொழிகளை அவர் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவருக்கு பல முறை வாய்ப்பு வழங்கப்பட்டும், இறுதியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்” எனத் தெரிவித்தார்.

மேலும், பாஜக தலைவர் ஷேஜாத் பூனவாலா கூறுகையில், “ராஜஸ்தானில் பெண்களின் நிலை குறித்து பேசியதற்காக ராஜேந்திர குதாவை தனது அமைச்சரவையில் இருந்து முதலமைச்சர் அசோக் கெலாட் நீக்கி உள்ளார். அவர் உண்மையை வெளிப்படுத்தினார்” எனத் தெரிவித்தார். அதேபோல், மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறுகையில், “தனது அரசில் அமைச்சர்களும் பாதுகாப்பாக இல்லை என உணர்த்துகிறார்” என்றார்.

இதுகுறித்து அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட ராஜேந்திர குதா கூறுகையில், “நான் எப்போதும் உண்மையை மட்டும்தான் பேசுவேன். நான் எனது மனசாட்சியைப் பின் தொடர்கிறேன். உண்மையை பேசியதற்காக நான் தண்டிக்கப்பட்டு உள்ளேன். இந்த அரசு குறுகி இருந்த காலத்தில், நானும் எனது தோழமைளும் அரசைக் காப்பாற்ற உழைத்தோம்” எனக் கூறி உள்ளார்.

இதையும் படிங்க: NDA அல்லது INDIA இதில் எதனுடன் கூட்டணி? - மாஜி பிரதமர் தேவகவுடா பளீச் பதில்!

Last Updated :Jul 22, 2023, 5:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.