ETV Bharat / bharat

மாநிலங்களிடம் 12 கோடிக்கும் மேல் தடுப்பூசி கையிருப்பு

author img

By

Published : Feb 12, 2022, 4:05 PM IST

Central government
Central government

இந்தியாவில் நாடு தழுவிய கோவிட் தடுப்பூசி திட்டத்தின் கீழ் மாநிலங்களிடம் 12 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு உள்ளது.

மாநிலங்களுக்கான கோவிட்-19 தடுப்பூசி விநியோகம் குறித்து மத்திய சுகாதராத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இதுவரை செய்யப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் விநியோகம், மாநிலங்களின் கையிருப்பு குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, "இதுவரை 170 கோடியே 14 லட்சத்துக்கும் டோஸ் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதில், உபயோகம் போக 12 கோடியே 27 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் மாநிலங்களின் கையிருப்பில் உள்ளன.

மேலும், அடுத்த சில நாள்களில் கூடுதல் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளன" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு தற்போது 75 விழுக்காடு தடுப்பூசிகளை இலவசமாக விநியோகம் செய்துவருகின்றன.

இந்தியாவில் இதுவரை 172 கோடியே 65 லட்சத்து 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. சுமார் 95 கோடியே 76 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 75 கோடியே 25 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும், 46 லட்சத்து 52 ஆயிரத்து 463 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ஒரு சிறிய கிராம்பில் இவ்வளவு நன்மைகளா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.