குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வா போட்டி!

author img

By

Published : Jul 17, 2022, 6:46 PM IST

Alva

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வா போட்டியிடுவார் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் அறிவிப்பினை வெளியிட்டார்.

டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தல், ஆகஸ்ட் 6ஆம் தேதி நடத்தப்படவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 5ஆம் தேதி தொடங்கி உள்ளது.

வேட்பு மனு தாக்கல் வரும் 19ஆம் தேதி முடிவடைகிறது. வேட்பு மனு பரிசீலனை 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 6ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்ததும், அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இத்தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில், ஜெகதீப் தன்கார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் சார்பில், காங்கிரஸைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வா போட்டியிடுவார் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். மார்கரெட் ஆல்வா கர்நாடக மாநிலம், மங்களூருவைச் சேர்ந்தவர். முன்னதாக குஜராத், ராஜஸ்தான், உத்தரகாண்ட் மாநில ஆளுநராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: துணை குடியரசு தலைவர் தேர்தல் - தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஜகதீப் தங்கார் தேர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.