ETV Bharat / bharat

செங்கோட்டையில் சீக்கிய கொடி ஏற்றிய நபர் கைது!

author img

By

Published : Feb 4, 2021, 12:08 PM IST

டெல்லி
டெல்லி

டெல்லி: குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் சீக்கிய கொடி ஏற்றிய நபரை, காவல் துறையினர் கைது செய்தனர்

ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை சம்பவமாக வெடித்தது. செங்கோட்டைக்குச் சென்ற போராட்டக்காரர்கள், அங்கிருந்த கம்பத்தில் ஏறி கால்சா என்னும் சீக்கியர்களின் கொடியை ஏற்றினர். இதையடுத்து, அங்கு துணை ராணுவப்படை குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய தர்மந்திரா சிங் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்தான் செங்கோட்டையில் சீக்கிய கொடி ஏற்றியதாக கூறப்படுகிறது.

முன்னதாக, செங்கோட்டையில் கொடி ஏற்றிய நிகழ்வை பேஸ்புக்கில் நேரலை செய்த குற்றத்திற்காக பஞ்சாப் நடிகர் தீப் சிங் சித்துக்கு, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சம்மன் அனுப்பி இருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.