ஒடிசாவில் பாலத்தில் இருந்து கவிழ்ந்த பேருந்து - 2 பெண்கள் உயிரிழப்பு

author img

By

Published : Jan 23, 2023, 10:26 AM IST

ஒடிசாவில் சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - இருவர் பலி

ஒடிசாவில் சுற்றுலா பேருந்து பாலத்தில் இருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

தென்கானல்: ஒடிசாவின் கெந்திரபரா மாவட்டத்தில் உள்ள இச்சப்பூர் கிராமத்தில் இருந்து 50 பேர் போலாங்கீர் மற்றும் சாம்பல்பூருக்கு பேருந்தில் சுற்றுலா சென்றிருந்தனர். இந்த பேருந்து தென்கானல் மாவட்டத்தின் சதார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஞ்சுபடி அருகில் நேற்றிரவு (ஜனவரி 22) சென்றுகொண்டிருந்தது.

சுற்றுலா பேருந்து விபத்து

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இச்சப்பூரைச் சேர்ந்த ரேனுபாலா ஜெனா மற்றும் பிஜயலட்சுமி ஆகிய 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்தனர். இவர்களை போலீசார் மீட்டு தென்கானல் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதில் 15 பேர் மேல்சிகிச்சைக்காக, கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அரக்கோணம் கிரேன் விபத்து நிகழ்ந்தது எப்படி? முழு விவரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.