ETV Bharat / bharat

காணாமல்போன பூனை - கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் என்று ஒட்டப்பட்ட நோட்டீஸ்

author img

By

Published : Sep 7, 2022, 10:40 PM IST

Etv Bharat
Etv Bharat

புதுச்சேரியில் காணாமல் போன பூனையைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்ற நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

புதுச்சேரி காந்தி நகர் பகுதியில் இன்று (செப்.7) 'பூனை காணவில்லை' என்ற நோட்டீஸை வேளாண் தோட்டத்தைச் சேர்ந்த ராமன் எனும் டீ வியாபாரி ஒட்டியுள்ளார். அதில் "குட்டூ" என அழைக்கப்படும் தனது பூனை கடந்த 3ஆம் தேதி முதல் காணவில்லை என்றும்; இதுகுறித்து தகவல் தெரிவித்தால் பணம் சன்மானமாக வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டு தனது தொலைபேசி எண்ணையும் அவர் இணைத்துள்ளார்.

சென்னையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, குட்டியாக இருந்த இப்பூனையை தனது மகள் புதுச்சேரிக்கு கொண்டு வந்து கடந்த 4 ஆண்டுகளாக வளர்த்து வந்துள்ளார். இதனிடையே வீட்டிற்குள்ளே இருந்த பூனை கடந்த 3ஆம் தேதி முதல் காணாமல்போனது என கவலையுடன் ராமன் மற்றும் அவரது மனைவி சுகந்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தொலைந்த பூனை குறித்து தகவல் அளிப்போருக்கு சன்மானம்

இதனிடையே அந்த நோட்டீஸில் அவர் தொலைந்த பூனை குறித்து தகவல் அளிப்பவருக்கு தகுந்த சன்மானம் அளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: 'ரூ.25 லட்சத்திற்கு புலிக்குட்டி விற்பனை' - வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த நபர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.