மகன் இறந்த செய்தி கேட்டு தாயும் மாரடைப்பில் உயிரிழப்பு

author img

By

Published : Sep 21, 2021, 4:15 PM IST

தாய், மகன் உயிரிழப்பு

புதுச்சேரி அருகே ஆற்றில் மூழ்கி மகன் இறந்த செய்தி கேட்டு, அதிர்ச்சி அடைந்த தாய் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி: மேட்டுப்பாளையம் சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர், லட்சுமி. இவரது கணவர் வேலு சைக்கிள் கடை நடத்தி வருகிறார்.

இவர்களது மகன் ஜீவா மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் கார் சர்வீஸ் சென்டரில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் (செப்.19) மாலை நண்பர்களுடன் சேர்ந்து நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் மீன் பிடித்துவிட்டு ஆற்றில் குளித்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழமானப் பகுதிக்குச் சென்று மாயமாகியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் ஜீவாவைத் தேடியும் கிடைக்கவில்லை. வெகுநேரம் கழித்து ஜீவாவின் உடல் கரை ஒதுங்கியது. பின்னர் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தாய், மகன் உயிரிழப்பு
தாய், மகன் உயிரிழப்பு

இந்தநிலையில், மகன் ஆற்றில் மூழ்கி இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் லட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

உடனடியாக அவர் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு லட்சுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ஒரே குடும்பத்தில் தாய், மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் 6 ஏடிஎம்களில் கொள்ளை முயற்சி: சுத்தியலுடன் சரணடைந்த இடைத்தரகர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.