அசாம்: சரைடியோ மாவட்டம், மஹ்மாராவில் உள்ள இரண்டு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ ஊழியர்கள் இரும்பு சத்து மாத்திரைகளை வழங்கியுள்ளனர்.
அதனை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. மஹ்மாராவில் உள்ள நிர்மாலியா தொடக்கப் பள்ளியில் இரும்பு சத்து மாத்திரைகளை உட்கொண்ட 26-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதேபோல கெர்னிபதாரில் உள்ள ஆரம்பப் பள்ளியை சேர்ந்த சுமார் 25 மாணவர்களும் நோய்வாய்ப்பட்டதாக தெரிகிறது.
நோய்வாய்ப்பட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் தருவார்'