நாடாளுமன்ற மழைக் காலக்க கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், பெகாசஸ் விவகாரம், வேளாண் சட்டம் ஆகியவற்றை காட்டி இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று(ஆகஸ்ட் 9) மக்களவை கூடிய நிலையில் நாள் முழுவதும் எதிர்க்கட்சிகள் அமளி செய்ததால் ஐந்து முறை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் மூன்று மசோதாக்களை விவாதிக்காமல் அரசு நிறைவேற்றியது.
நிறைவேற்றப்பட்ட மூன்று மசோதாக்கள்
- வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டு திருத்த மசோதா
- வைப்புக்காப்பீடு மற்றும் கடன் உறுதிக் கழக திருத்த மசோதா
- பழங்குடியினருக்கான அரசியலமைப்பு உத்தரவு திருத்த மசோதா
தொடர்ந்து மக்களவையில் அமளி ஏற்பட்டதால் நாளை காலை 11 வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் மோடி தலைமையிலான அரசு 127ஆவது அரசியல் சட்டத் திருத்த மசோதாவை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
இதற்கு ஆதரவு தர எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளதாக ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சிகள் ஆதரவு - '127ஆவது சட்டதிருத்த மசோதா' என்றால் என்ன?