ETV Bharat / bharat

பெண்ணுக்கு 10 நாள்கள் பாலியல் தொல்லை - நான்கு பேர் கைது

author img

By

Published : Jan 4, 2023, 10:21 PM IST

Etv Bharat
Etv Bharat

ஆக்ராவில் தனியார் விடுதியில் வைத்து பெண் ஒருவரை 10 நாள்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அவரது குழந்தையை விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்த பெண் உள்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேசம்: ஆக்ராவிலுள்ள ஒரு விடுதியில் ஒரு பெண்ணை ஏமாற்றி அழைத்து வந்து 10 நாள்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பெண் உள்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மிர்சாபூர் மாவட்டத்திலுள்ள சுனார் என்ற பகுதியைச் சேர்ந்தவர், அந்த கூலித் தொழிலாளி பெண். இவரது கணவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தனது இரண்டரை வயது குழந்தையுடன் வசித்து வந்தார்.

அவரிடம் பெண் தரகர் ஒருவர் சென்று ஆக்ராவில் நல்ல வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். அதிக ஊதியம், குழந்தைக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற ஆசைவார்த்தைகளை கேட்ட அப்பெண்ணும் இதற்கு ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அந்த தரகர் பெண், பாதிக்கப்பட்ட பெண்ணை தனது ஆண் நண்பர்கள் மூவருடன் சேர்ந்து ஆக்ரா அழைத்துச் சென்றார். தரகர் பெண் உள்பட மூன்று ஆண் நண்பர்களும் கூலி தொழிலாளி பெண்ணை விற்க முடிவு செய்து பல திட்டங்களைத் தீட்டியுள்ளனர்.

ஆனால், அவர்கள் போட்ட திட்டம் தோல்வியடைந்தது. இதனால், கூலித் தொழிலாளி பெண்ணின் குழந்தையை ஹரியானாவிலுள்ள குருகிராம் பகுதியைச் சேர்ந்தவரிடம் விற்றுள்ளனர். மேலும், அந்தப் பெண்ணை ஒரு தனியார் விடுதி அறையில் வைத்து அடைத்து மூவரும் தொடர்ந்து 10 நாள்களாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆக்ரா காவல் துறையினர், விசாரணை நடத்தி குற்றவாளிகள் நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தையை மீட்கும் முயற்சியில் குருகிராம் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பாட்னாவில் சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை - 5 பேர் மீது வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.