ETV Bharat / bharat

சிலிண்டர்களிலிருந்து வாயுக்கசிவு: மகாராஷ்டிராவில் பீதி

author img

By

Published : May 2, 2021, 4:56 PM IST

சிலிண்டர்களில் இருந்து எரிவாயு கசிந்து பரவியது
சிலிண்டர்களில் இருந்து எரிவாயு கசிந்து பரவியது

இரண்டு சிலிண்டரிலிருந்து நச்சு வாயு கசிந்து மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிரா: தானே பிவாண்டியில் உள்ள குனி கிராமத்தின் சிக்னிபாடா பகுதியில் சல்பர் டை ஆக்சைடு நிரப்பப்பட்ட பதினாறு சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், நேற்று இரண்டு சிலிண்டர்களிலிருந்து நச்சு வாயு கசிந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து, உடனே காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. காவல் துறையினர் தியணைப்பு வீரர்களுடன் விரைந்தனர். நல்வாய்ப்பாக எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை.

இதையும் படிங்க: தெற்கு மண்டலத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த திமுக!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.