ETV Bharat / bharat

முன்னாள் காதலனும் கணவனும் கூட்டு சேர்ந்து இளம்பெண் மீது ஆசிட் வீச்சு

author img

By

Published : Nov 3, 2022, 6:28 PM IST

Maharashtra: Ex-husband booked for throwing acid at woman, lover
Maharashtra: Ex-husband booked for throwing acid at woman, lover

மகாராஷ்டிராவில் இளம்பெண் மற்றும் அவரது காதலன் மீது ஆசிட் வீசிய முன்னாள் காதலனையும் கணவனையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள நல்லசோபராவில் 20 வயது இளம்பெண் கரிஷ்மா அலி மற்றும் அவரது காதலன் கலாம் கான் மீது ஆசிட் வீசிய முன்னாள் காதலனையும் கணவனையும் போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் தரப்பில், பால்கர் மாவட்டத்தை சேர்ந்த கரிஷ்மா அலி என்பவருக்கும் தௌபிக் இத்ரிஸ் என்பவருக்கும் கடந்தாண்டு திருணம் நடந்தது.

அதைத்தொடர்ந்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அப்போது கரிஷ்மாவுக்கும் கம்ரான் அன்சாரி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கணவன் மனைவி போல வாழ்ந்துவந்தனர். அதன்பின் அவரையும் கரிஷ்மா பிரிந்தார். மூன்றாவதாக நல்லசோபாராவை கலாம் கான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் லிவ்-இன் உறவில் வாழ்ந்துவந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த தௌபிக் இத்ரிஸ், கம்ரான் அன்சாரி இருவரும் கூட்டுசேர்ந்து நேற்றிரவு 2 மணியளவில் நல்லசோபராவில் உள்ள கலாம் கான் வீட்டிற்கு சென்றனர். அதைத்தொடர்ந்து இருவர் மீதும் தாங்கள் எடுத்துவந்த ஆசிட்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதனால் கரிஷ்மா அலி மற்றும் கலாம் கான் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன். அதன்பின் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தௌபிக் இத்ரிஸ், கம்ரான் அன்சாரி இருவரையும் தேடி வருகின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: திருமணத்திற்கு மீறிய உறவை கண்டித்த மகன் கொலை... தாய் கைது...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.