ETV Bharat / bharat

அடேங்கப்பா! ஜெயிலில் சொகுசு வாழ்க்கை: சுகேஷின் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள காலணிகள், ரூ.80,000 ஜீன்ஸ் பறிமுதல்

author img

By

Published : Feb 23, 2023, 7:00 PM IST

சுகேஷ் சந்திரசேகர் பொருட்கள் பறிமுதல்
சுகேஷ் சந்திரசேகர் பொருட்கள் பறிமுதல்

டெல்லியில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் சிறை அறையில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள காலணிகள், ரூ.80,000 மதிப்புள்ள ஜீன்ஸ் பேன்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

டெல்லி: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு, தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி ஆகிய வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேஷ், டெல்லி மன்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்குகள் தொடர்பாக பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னான்டஸ், நேரோ படோகியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, ரூ.3.5 கோடி மோசடி செய்த வழக்கில் கடந்த வாரம் சுகேஷை போலீசார் மீண்டும் கைது செய்தனர். இதையடுத்து அவரை 9 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சுகேஷ் அடைக்கப்பட்டுள்ள மன்டோலி சிறையில் இன்று (பிப்.23) சிறைத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

ஜெயிலர் தீபக் சர்மா மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் சுகேஷின் அறையை சோதனை செய்தனர். அப்போது ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள காலணிகள், ரூ.80,000 மதிப்புள்ள ஜீன்ஸ் பேன்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தன்னுடைய பொருட்களை போலீசார் கண்டுபிடித்ததால், அவர்கள் முன்னிலையில் சுகேஷ் கண்ணீர் விட்டு அழுதார். இதுதொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகளை சிறைத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். சுகேஷிடம், சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளி தொழில் அதிபர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.