ETV Bharat / bharat

வாடகை வீட்டிற்கு இரவு தாமதமாக வந்த நபர்; துப்பாக்கியால் சுட்ட வீட்டு உரிமையாளர்

author img

By

Published : Jan 9, 2023, 10:27 PM IST

வாடகை வீட்டிற்கு இரவு தாமதமாக வந்த நபர்; துப்பாக்கியால் சுட்ட வீட்டு உரிமையாளர்
வாடகை வீட்டிற்கு இரவு தாமதமாக வந்த நபர்; துப்பாக்கியால் சுட்ட வீட்டு உரிமையாளர்

ராஞ்சியில் வீட்டு உரிமையாளர் ஒருவர் தனது வீட்டில் வாடகைக்கு இருந்த நபர் இரவு வீட்டிற்கு தாமதமாக வந்ததால் துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஞ்சி (ஜார்க்கண்ட்): கோக்மா டோலி என்னும் ஊரில் உள்ள ராணுவ வீரர் ராஜேஷ் திவாரியின் வீட்டில், ஹரிலால் யாதவ் என்கிற பப்லு யாதவ் வாடகைக்கு வசித்து வருகிறார். குத்தகைதாரர் பப்லு எப்போதும் வேலை காரணமாக இரவு தாமதமாக வீட்டுக்கு வருவார்.

வீட்டிற்கு தாமதமாக வரக்கூடாது என உரிமையாளர் அடிக்கடி பப்லுவிடம் கூறிவந்துள்ளார். ஆனால் பப்லு தொடர்ந்து வீட்டிற்கு தாமதமாகவே வந்துள்ளார். பப்லு யாதவ் சம்பவம் நடந்த ஞாயிற்றுக்கிழமையும் வீட்டிற்கு தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார்.

இரவில் எழுந்து கதவைத் திறப்பது கடினமாக உள்ளது; இதனால் வீட்டிற்கு தாமதமாக வந்தால் கதவு திறக்கப்படாது என்று ராணுவ வீரர் கூறியுள்ளார். இதற்கு பப்லு வேறு சாவியைக் கொடுக்கும்படி கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றியதில் ராணுவ வீரர், உரிமம் பெற்ற துப்பாக்கியால் பப்லுவை நோக்கி சுட்டுள்ளார். இதில் தோட்டா பப்லுவின் காலில் பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் விமான நிலைய காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராணுவ வீரரை கைது செய்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: UP Rape: பெண்ணை கட்டிப்போட்டு தீ வைத்த கொடூரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.