ETV Bharat / bharat

செயற்கை கருவூட்டலுக்கான வயது வரம்பு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் - உயர்நீதிமன்றம்

author img

By

Published : Jan 4, 2023, 9:22 AM IST

Updated : Jan 4, 2023, 3:12 PM IST

கேரள உயர்நீதிமன்றம்
கேரள உயர்நீதிமன்றம்

செயற்கை கருவூட்டலுக்கான வயது வரம்பு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எர்ணாகுளம்: செயற்கை கருவூட்டல் செய்யும் தம்பதிகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட வயது வரம்பு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் அதை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் தேசிய உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் வாரியத்துக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செயற்கை கர்ப்பம் தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டம், 2022 பிரிவு 21 (G) இன் படி, செயற்கை கருவூட்டல் செய்யவிரும்பும் தம்பதிகளில் ஆணுக்கு 55 வயதையும், பெண்ணுக்கு 50 வயதையும் நிர்ணயம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த வயதைக் கடந்தால், செயற்கை கருவூட்டலுக்கு அனுமதி கிடையாது என்று கூறப்பட்டிருந்தது. இந்த வயது வரம்பு தனிப்பட்ட சுதந்திரத்தை மறுப்பதாக கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.ஜி.அருண், குழந்தைகளைப் பெற்றெடுப்பதும், தேவைப்படும்போது குடும்பத்தை விரிவுப்படுத்துவதும் அடிப்படை உரிமையாகும்.

இந்த வயது வரம்பு தனிப்பட்ட சுதந்திரத்தை மறுப்பதாக உள்ளது. மருத்துவ சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு சர்வாதிகாரமாகவும், பகுத்தறிவற்றதாகவும் இருக்கிறது. ஆகவே, செயற்கை கருவூட்டல் தொடர்பாக மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் தேசிய உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் வாரியம், இதை மூன்று மாதங்களில் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல நீதிபதி வி.ஜி.அருண் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ரத்தப் புற்றுநோய் நோயாளிகளையும் காப்பாற்றும் கோவிட் தடுப்பூசி

Last Updated :Jan 4, 2023, 3:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.