ETV Bharat / bharat

மறைந்த உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தான கவுடருக்கு முழு அரசு மரியாதை

author img

By

Published : Apr 25, 2021, 5:15 PM IST

Justice Shantanagoudar
Justice Shantanagoudar

மறைந்த உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தான கவுடருக்கு முழு அரசு மரியாதை வழங்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தான கவுடர் உடல் நலக்குறைவால் நேற்றிரவு காலமானார். 62 வயதான அவர் நுரையீரல் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சிசிக்சை பெற்றுவந்தார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அவரது உடல் சொந்த ஊரான ஹவேரிக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், சந்தான கவுடரின் நல்லடக்கம் முழு அரசு மரியாதையுடன் நடைபெற என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இவரது மறைவு நீதித்துறைக்கு பேரிழப்பு என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா அஞ்சலி குறிப்பில் தெரிவித்துள்ளார். அம்மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் பசவராஜ் உள்ளிட்ட முக்கிய அமைச்சர் சந்தானத்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: சரத் பவாருக்கு மேலும் ஒரு மருத்துவ சிகிச்சை மருத்துவமனையில் அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.