ETV Bharat / bharat

உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட்டிற்கு கரோனா பாதிப்பு!

author img

By

Published : May 13, 2021, 7:27 AM IST

Justice Chandrachud
Justice Chandrachud

உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட்டிற்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால், அவர் அமர்வு விசாரித்து வந்த வழக்கு விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் கோவிட்-19 பாதிப்பிற்குள்ளாகியுள்ளார். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் கோவிட்-19 பரவல் தொடர்பான பொதுநல வழக்கை நீதிபதிகள் சந்திர சூட், நாகேஷ்வர ராவ், ரவீந்திர பட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது. கடைசியாக மே9ஆம் தேதி வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், 10ஆம் தேதி அன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக வழக்கு விசாரணை மே 13 (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது நீதிபதி சந்திரசூட்டிற்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இன்று விசாரணை இன்று நடைபெறாது எனவும், விசாரணைக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மனைவியின் இறுதிச் சடங்கிற்காக 130 கி.மீ., தூரம் சைக்கிள் பயணம் செய்த பெரியவர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.