ETV Bharat / bharat

"உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி" - உ.பி., ஆச்சார்யா அறிவிப்பு.. கொந்தளிக்கும் திமுக..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 8:34 PM IST

Updated : Sep 4, 2023, 8:55 PM IST

Etv Bharat
Etv Bharat

Udhayanidhi stalin controversy: சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறிய நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என தபஸ்வி கன்டோன்மென்ட்டைச் சேர்ந்த ஜகத்குரு பரமன் ஆச்சார்யா கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்யா: உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் எனத் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். இதனை, விமர்சித்த ஜகத்குரு பரமன் ஆச்சார்யா, “டெங்கு, மலேரியா போன்ற சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று திமுக தலைவரின் மகன் என்ன தைரியத்தில் கூறியிருக்கிறார்?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், உதயநிதியின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரது போஸ்டர்களை கிழித்து, தீயை வைத்து எரித்தார்.

தொடர்ந்து, உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி பரிசுத் தொகை வழங்குவதாக அவர் அறிவித்திருக்கிறார். யாராலும் அவரது தலையை வெட்ட முடியாவிட்டால், தானே அதைச் செய்வதாகக் கூறியிருக்கிறார். மேலும், “உதயநிதியின் தந்தை மு.க.ஸ்டாலின் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ‘இந்தியா’ கூட்டணியின் உறுப்பினர். அந்த கூட்டணித் தலைவர் ஒருவரின் மகன் இவ்வாறு கூறியிருப்பதன் மூலம் கூட்டணித் தலைவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டுகிறது. உதயநிதி ஸ்டாலின், வேறு எந்த மதத்தையாவது இவ்வாறு கூறியிருந்தால், இந்நேரம் அவரது கதை முடிந்திருக்கும்.

ஆனால், சனாதன தர்ம மக்கள் அகிம்சையை நம்புகிறார்கள் அதன் விளைவாகத் தான் அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார். கடந்த காலங்களிலும் சனாதன தர்மத்தை ஒழிக்கச் சதிகள் தீட்டிய அசுரர்கள் கொல்லப்பட்டனர். உதயநிதி உலகின் ஏதோ ஒரு மூலையில் பதுங்கியிருக்கலாம், ஆனால் அவர் செய்த செயல்களுக்காக அவர் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவார்” ஜகத்குரு பரமன் ஆச்சார்யா கூறியுள்ளார்.

ஜனசத்தா லோக்தந்திரிக் தளத்தின் (Jansatta Loktantrik Dal) தலைவரும், பிரதாப்கரின் குண்டா தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ரகுராஜ் பிரதாப் சிங், உதயநிதியின் கருத்துக்குத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார், “இதுபோன்ற வெறுப்பூட்டும் கருத்துகளை ஒவ்வொரு இந்தியனும் கடுமையாக எதிர்க்க வேண்டும். இது இந்துக்கள் மீதான திமுகவின் வெறுப்பையும் காட்டுகிறது” எனக் கூறினார்.

ஜகத்குரு பரமன் ஆச்சார்யாவின் இந்த அறிவிப்புக்குத் தமிழ்நாட்டில் திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், சமூக வலைத்தளங்களில் ஆரியர்களின் கருத்துக்கு எதிராக திமுகவினர் திராவிட கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, வடமாநிலத்தில் உள்ள ஜகத்குரு பரமன் ஆச்சார்யா, தமிழ்நாடு முதலமைச்சரின் மகன் உதயநிதியின் போஸ்டரை கத்தியால் கிழித்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்திற்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும், மத்திய மாநில அரசுகள் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுகவினர் தங்களது ஆதங்கத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: Speaking For India : முதலமைச்சர் ஸ்டாலினின் "ஸ்பீக்கிங் பார் இந்தியா" ! இந்திய மொழிகளில் ஆடியோ வெளியீடு!

Last Updated :Sep 4, 2023, 8:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.