ETV Bharat / bharat

எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை!

author img

By

Published : Mar 21, 2021, 11:57 AM IST

border village
ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூர்: இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவ முயன்ற நபர், எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் வழியாக இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற நபர், எல்லை பாதுகாப்புப் படையினர் ஒருவரால், சுட்டுக்கொல்லப்பட்டார்.

நேற்றிரவு (மார்ச்.20) 7 மணியளவில், இந்திய - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான்வாசி ஒருவர், நுழைய முயன்றுள்ளார். இதனைப் பார்த்த பணியிலிருந்த பாதுகாப்புப் படையினர், வேலியைத் தாண்டி வரக்கூடாது எனப் பல முறை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், அவர் பொருட்படுத்தாமல் முன்னேறிவந்ததால், துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அந்நபரிடமிருந்து ஆயுதங்களோ, சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் மீட்கவில்லை. விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? சர்வதேச மகிழ்ச்சி நாளன்று தெரிந்துகொள்வோம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.