ETV Bharat / bharat

நாட்டில் புதிதாக 67,084 பேருக்கு கோவிட் பாதிப்பு

author img

By

Published : Feb 10, 2022, 12:32 PM IST

COVID cases
COVID cases

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67 ஆயிரத்து 084 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி: இந்தியாவின் கோவிட் நிலவரம் குறித்த புள்ளிவிவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67 ஆயிரத்து 084 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு நான்கு கோடியே 24 லட்சத்து 78 ஆயிரத்து 060 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் ஆயிரத்து 241 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு ஐந்து லட்சத்து ஆராயிரத்து 520 ஆக உள்ளது. நாட்டில் தற்போது ஏழு லட்சத்து 90 ஆயிரத்து 789 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 882 ஆக உள்ளது. இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை நான்கு கோடியே 11 லட்சத்து 80 ஆயிரத்து 751 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 171.28 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 74.61 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், நேற்று (பிப். 8) மட்டும் 15 லட்சத்து 11 ஆயிரத்து 321 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதையும் படிங்க: Hijab Row: ஹிஜாப் வழக்கு மூன்று நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.