ETV Bharat / bharat

இந்தியாவில் நேற்றை விட இன்று கரோனா பாதிப்பு குறைவு!

author img

By

Published : Apr 25, 2022, 12:54 PM IST

இந்தியா
இந்தியா

கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் புதிதாக 2 ஆயிரத்து 541 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று (ஏப்ரல் 25) தினசரி கரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டது. அதன்படி, "கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் புதிதாக 2 ஆயிரத்து 541 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றை பாதிப்பான 2 ஆயிரத்து 593 விட குறைவாகும். நாட்டில் மொத்தம் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 60 ஆயிரத்து 86 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 1862 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். அதன்படி நாட்டில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 21 ஆயிரத்து 341 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 30 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்தம் எண்ணிக்கை 5 லட்சத்து 22 ஆயிரத்து 224 ஆக உயர்ந்துள்ளது.

நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை 187.71 கோடி டோஸ்களை கடந்துள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் புதிய Xe பாதிப்பு இல்லை, எனினும் கவனம் தேவை' - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.