ETV Bharat / bharat

கோவிட் நிலவரம்: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 80 ஆயிரத்துக்கும் கீழ் சரிந்தது

author img

By

Published : Mar 3, 2022, 10:52 AM IST

Union Health Ministry
Union Health Ministry

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 6,561 கோவிட் பாதிப்பு, 142 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6 ஆயிரத்து 561 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது, 8 லட்சத்து 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நேற்று, ஒரே நாளில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 142ஆக பதிவாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு ஐந்து லட்சத்து 14 ஆயிரத்து 388 ஆக உள்ளது. நாட்டில் தற்போது 77 ஆயிரத்து 152 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை நான்கு கோடியே 23 லட்சத்து 53 ஆயிரத்து 620 ஆக உள்ளது. இதுவரை மொத்தம் 178 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.

அதில், நேற்று (பிப்.22) மட்டும் 21 லட்சத்து 83 ஆயிரத்து 976 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை 96 கோடியே 62 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 79 கோடியே 41 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். சுமார் ஒரு கோடியே 90 லட்சம் பேர் முன்னெச்சரிக்கை டோஸ்சும் செலுத்தியுள்ளனர்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதையும் படிங்க: ஆப்ரேஷன் கங்கா: 183 இந்தியர்களுடன் மும்பை வந்திறங்கிய விமானம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.