ETV Bharat / bharat

நாட்டில் ஒரேநாளில் 4,575 பேருக்கு கோவிட் பாதிப்பு

author img

By

Published : Mar 9, 2022, 12:26 PM IST

India
India

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,575 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4 ஆயிரத்து 575 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது, 8 லட்சத்து 97 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நேற்று, ஒரே நாளில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 145ஆக பதிவாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு ஐந்து லட்சத்து 15 ஆயிரத்து 355 ஆக உள்ளது. நாட்டில் தற்போது 46 ஆயிரத்து 962 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை நான்கு கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 566 ஆக உள்ளது. இதுவரை மொத்தம் 179 கோடிக்கும் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.

அதில், நேற்று (மார்ச் 8) மட்டும் 18 லட்சத்து 69 ஆயிரத்து 103 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை 96 கோடியே 78 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 80 கோடியே 53 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். சுமார் ஒரு கோடியே 96 லட்சம் பேர் முன்னெச்சரிக்கை டோஸ்சும் செலுத்தியுள்ளனர்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதையும் படிங்க: உக்ரைனில் சிக்கித் தவித்த பாகிஸ்தான் மாணவியை மீட்ட இந்தியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.