ETV Bharat / bharat

நாட்டில் புதிதாக 38,628 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு

author img

By

Published : Aug 7, 2021, 11:42 AM IST

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 38 ஆயிரத்து 628 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா பாதிப்பு நிலவரம்
கரோனா பாதிப்பு நிலவரம்

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கடந்த 24 மணி நேரத்தில் 38 ஆயிரத்து 628 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை மூன்று கோடியே 18 லட்சத்து 95 ஆயிரத்து 385ஆக பதிவாகியுள்ளது.

ஒரேநாளில் 617 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை நான்கு லட்சத்து 27 ஆயிரத்து 371ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா தொற்றிலிருந்து குணமானோர் எண்ணிக்கை மூன்று கோடியே 10 லட்சத்து 55 ஆயிரத்து 861 ஆகப் பதிவாகியுள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 49 லட்சத்து 55 ஆயிரத்து 138 டோஸ் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கும்பமேளாவில் கரோனா சோதனை செய்த ஆய்வகங்களில் திடீர் ரெய்டு: வெளியான திடுக்கிடும் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.