ETV Bharat / bharat

கோவிட்-19: குணமடைந்தவர்களை தாண்டி, 41,831 பேர் தொற்றால் பாதிப்பு

author img

By

Published : Aug 1, 2021, 11:19 AM IST

கரோனா மூன்றாம் அலை வர வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக, நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

India COVID 19 tracker
India COVID 19 tracker

ஹைதராபாத்: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 41ஆயிரத்து 831 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், 541 பேர் தொற்றுக்கு ஆளாகி இறந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 3 கோடியே 16 லட்சத்து 55 ஆயிரத்து 351 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பு ஏற்பட்டு 4 லட்சத்து 24 ஆயிரத்து 351 பேர் இறந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 60 லட்சத்து 15 ஆயிரத்து 842 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 47 கோடியே 2 லட்சத்து 98 ஆயிரத்து 596 தடுப்பூசி டோஸ்கள் பயனர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.