ETV Bharat / bharat

உள்நாட்டு போர் - ஆப்கானிலிருந்து நாடு திரும்பிய இந்தியர்கள்

author img

By

Published : Aug 11, 2021, 3:21 PM IST

Afghanistan
Afghanistan

உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்திய தூதரக அலுவலர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா படை விலகல் நடவடிக்கையை மேற்கொண்டுவருவதால், அங்கு மீண்டும் தலிபான்களின் அதிக்கம் தலைதூக்கியுள்ளது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் சொந்த நாட்டிற்கு மீட்டுச் செல்லப்படுகின்றனர்.

அங்குள்ள பெரும்பாலான ஊரகப் பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், நகர்புறங்களையும் குறிவைத்து தற்போது நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். தலைநகர் காபுலை குறிவைத்து ஒவ்வொரு பிராந்தியங்களின் தலைநகரை தலிபான் கைப்பற்றத் தொடங்கியுள்ளனர்.

தற்போது மசார்-இ-ஷெரிஃப் என்ற தலைநகரை நோக்கி தலிபான்கள் நகர்ந்து வருகின்றனர். இந்நிலையில், மசார்-இ-ஷெரிப் பகுதியில் உள்ள தூதரகத்தையும் இந்தியா தற்காலிகமாக மூடியுள்ளது.

அங்கு பணிபுரிந்த அலுவலர்கள் இந்திய விமானப் படை சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். ஏற்கனவே கந்தகாரில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டு, அங்கு பணியாற்றிய அலுவலர்கள் இந்தியா கொண்டு வரப்பட்டனர்.

மீதமுள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியிலும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ’ஆப்கானிலிருந்து படை விலகும் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை’ - ஜோ பைடன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.