ETV Bharat / bharat

Crime: வாக்குவாதத்தில் மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவர்!

author img

By

Published : Jan 8, 2023, 7:03 PM IST

கணவர்
கணவர்

மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை திருப்புளியால் பலமுறை குத்தியும், மூக்கை கடித்து துப்பவும் செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

ஜஹாங்கிர்பூரி: வடக்கு டெல்லி, ஜஹாங்கிர்பூர் பகுதியைச் சேர்ந்தவர், சேத்ராம். மனைவியுடன், சேத்ராமுக்கு வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் வசைபாடிக் கொண்ட நிலையில், வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

திருப்புளியால் கட்டிய மனைவியின் உடலில் பல்வேறு இடங்களில் குத்தி கொடுமைப்படுத்திய சேத்ராம், அந்தரங்க இடங்களில் கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் கோபம் தீராமல் மனைவியின் மூக்கை கடித்து துப்பி உள்ளார். பலத்த காயங்களுடன் துடிதுடித்த பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,அப்பெண் தற்போது நல்ல உடல் நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஏற்கனவே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை தாக்கியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சேத்ராம் கடந்த வாரம் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், மீண்டும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு சண்டையிட்டுள்ளர். சம்பவம் குறித்து பெண் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: டெல்லி போலீசார் மீது தாக்குதல் நடத்திய ஆப்பிரிக்கர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.