ETV Bharat / bharat

காந்திக்கு பதிலாக நேதாஜி புகைப்படம் - ரூபாய் நோட்டில் மாற்ற அகில பாரத இந்து மகாசபா கோரிக்கை

author img

By

Published : Oct 22, 2022, 12:56 PM IST

Updated : Oct 22, 2022, 1:21 PM IST

இந்திய ரூபாய் தாள்களில் மகாத்மா காந்தியின் படத்திற்கு பதிலாக சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படத்டை வைக்க வேண்டுமென அகில பாரத இந்து மகாசபா

ரூபாய் நோட்டில் காந்திக்கு பதிலாக நேதாஜி புகைப்படம் மாற்ற வேண்டும் - அகில பாரத இந்து மகாசபா
ரூபாய் நோட்டில் காந்திக்கு பதிலாக நேதாஜி புகைப்படம் மாற்ற வேண்டும் - அகில பாரத இந்து மகாசபா

மேற்கு வங்காளம்: இந்திய ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தி படத்திற்கு பதிலாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படத்தை பதிக்க வேண்டும் என அகில பாரத் இந்து மகாசபா நேற்று(அக்.21) கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து , “நாட்டின் சுதந்திரத்திற்காக நேதாஜி அளித்த பங்கு என்பது மகாத்மா காந்தியுட ஒப்பிடுகையில் சற்றும் குறைந்தது இல்லை.

அதனால் காந்தியின் புகைப்படத்திற்கு பதிலாக நேதாஜியின் புகைப்படம் மாற்றியமைக்கப்பட வேண்டும். காந்தியின் படுகொலைக்குப் பின்னால் யார் இருந்தார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். தற்போது அவரது கொள்கையும், தத்துவமும் கொல்லப்பட்டு வருகிறது.

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் இதற்கு பதில் சொல்ல வேண்டும். நாங்கள் காந்தியை ஒரு போதும் மகிசாசூரனாக உருவகப்படுத்த நினைக்கவில்லை. அந்த சம்பவம் அந்த நோக்கத்தில் செய்யப்பட்டதல்ல, தற்செயலாக நடந்ததே. அதை சர்ச்சையாக்கி வருபவர்கள் அந்த செயல்களைக் கைவிட வேண்டும்.

பாஜகவோ, திரிணாமுல் காங்கிரஸோ இரண்டுமே பெங்காலி இந்துக்களின் பாதுகாக்காது. நாங்கள் தான் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க போராடுவோம். சில பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தது போல் பெங்காலை பிரிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை.

மாநிலத்தை பலப்படுத்தும் நோக்கத்திலேயே நாம் வேலை செய்ய வேண்டும். வருகிற பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு நாங்கள் நல்ல வெற்றியைப் பெறுவோம் ” என அகில பாரத இந்து மகாசபாவின் செயல் தலைவர் சந்திரசூர் கோசுவாமி பத்திரிகையாளர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தெலங்கானாவில் பாலியல் வழக்கில் சிக்கிய பள்ளிக்கு அங்கீகாரம் ரத்து

Last Updated : Oct 22, 2022, 1:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.