ETV Bharat / bharat

குஜராத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில் யாருக்கு பலம்... விரிவான அலசல்...

author img

By

Published : Nov 29, 2022, 9:23 PM IST

Updated : Nov 30, 2022, 4:35 PM IST

குஜராத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு யாருக்கு பலம்
குஜராத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு யாருக்கு பலம்

குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு சௌவுராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத்தின் 89 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை நடக்கிறது. இந்த வாக்குப்பதிவு யாருக்கு பலமா இருக்கும் என்பது குறித்து எழுதுகிறார் மூத்த பத்திரிக்கையாளர் ஷியாம் பரேக்.

குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. முதல்கட்ட தேர்தல் 89 தொகுதிகளுக்கு வரும் வியாழக்கிழமை நடக்கிறது. இதற்கான தேர்தல் பரப்புரை இன்றுடன் (நவம்பர் 29) நிறைவடைந்தது. இந்த தேர்தலில் சௌராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் மாவட்டங்களில் பாஜக தன்னை பலமாக உணர்வது போல் தெரிகிறது. இந்த தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி கனவாகவே இருக்கும் என்று பாஜக நம்புகிறது. மறுப்புறம், தன்னை வலுவான எதிர்க்கட்சியாக எண்ணும் ஆம் ஆத்மி மோர்பி பாலம் விபத்து எதிரொலி, சிறுபான்மையினரின் ஒற்றுமை பாஜகவுக்கு எதிராக திரும்பும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருகிறது.

சௌவுராஷ்டிரா பிராந்தியத்தின் முக்கிய தொழில் நகரமான மோர்பியில் அக்டோபர் 30ஆம் தேதி தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 135 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து மோர்பி மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களிலும் பாஜவுக்கு எதிர்வினையாக அமையும் என்று எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. குஜராத்தின் செல்வாக்கு மிக்க படேல் சமூகம் சௌவுராஷ்டிராவின் வாக்கு வங்கியில் முக்கிய பங்காற்றுகிறது. இந்த சமூக மக்களை பாஜக தன்வசம் வைத்துள்ளதாக நினைத்துக்கொண்டிருக்கிறது. சொல்லப்போனால், குஜராத்தின் முதலமைச்சர் பதவியை படேல் சமூகத்தை சேர்ந்த பூபேந்திர படேலுக்கு பாஜக வழங்கியுள்ளது. இதனால், மோர்பி விபத்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது பாஜகவின் எண்ணமாக உள்ளது.

குஜராத் தேர்தலில் 2ஆம் கட்டத்தைவிட முதல் கட்ட தேர்தலே பாஜகவுக்கு வெற்றியை தீர்மானிக்கும் காரணியாக இருக்கும். ஏனென்றால், சௌராஷ்டிரா பிராந்தியம் 2017ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளின்படி காங்கிரஸின் கோட்டையாகப் பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 48 இடங்களில் 28 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இந்த எண்ணிக்கை 2012ஆம் தேர்தலில் 15ஆக இருந்தது. அந்த வகையில் காங்கிரஸ் வெற்றி தொகுதிகளின் சராசரி எண்ணிக்கை 13ஆக உள்ளது. இதற்கு காரணம் படேல் சமூகம் பாஜக மீது கொண்டிருந்த அதிருப்தியே. இதனை மாற்றவே படேல் வேட்பாளர்களுக்கு பாஜக முன்னுரிமை கொடுத்துவருகிறது. 2017ஆம் தேர்தலுக்கு பின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கட்சி தாவல், இடைத்தேர்தல்கள் மூலம் காங்கிரஸ் வசம் இருந்த பல தொகுதிகளை பாஜக கைப்பற்றிவிட்டது.

இந்த தேர்தலில் சௌராஷ்டிராவில் பாஜக வெற்றி பெற தவறினால், 2ஆம் கட்டத் தேர்தலை வைத்து பெரும்பான்மையை காண்பிக்க முடியாது. குஜராத் மாநிலத்தின் வெற்றி ஒட்டுமொத்தமாக சௌராஷ்டிராவை பொறுத்தே தீர்மானிக்கப்படும். வெற்றி பெற்றாலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் கட்சி தாவல் செய்யக்கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த அச்சம் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாங்கு வங்கி குறையும். அந்த வாக்குகள் மற்ற கட்சிகளுக்கு செல்லும். இது பாஜகவுக்கு சாதகமாக அமையலாம்.

முதல் கட்ட வாக்குப்பதிவு தெற்கு குஜராத், சூரத் சுற்றுவட்டாரங்களை மையமாகக் கொண்டுள்ளது. இதில் சூரத்தில் பாஜக தன்னை பலமாக வைத்துள்ளது என்றே சொல்லலாம். அதாவது, குஜராத் மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டீலும், அமைச்சரவையில் மிகவும் செல்வாக்கு மிக்க ஹர்ஷ் சங்வியும் சூரத்தை சேர்ந்தவர்களாக பாஜக வைத்துள்ளது. மறுப்புறம் சூரத்தில் புலம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கையும் சற்று அதிகமாக உள்ளது. இவர்களும் முக்கிய வாங்கு வங்கியாக உள்ளனர். இவர்களது வாக்குகள் யாருக்கு செல்லும் என்பதிலும் வெற்றி தீர்மானிக்கப்படலாம். சூரத்தில் 2021ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது,​ ஆம் ஆத்மி 28% வாக்குகளைப் பெற்றது. பேரூராட்சி மற்றும் நகராட்சியில் 27 இடங்களைப் பெற்றது. இதன்மூலம் சூரத்தில் ஆம் ஆத்மிக்கு நல்ல வரவேற்பு இருப்பது தெளிவாக தெரிகிறது. இந்த செல்வாக்கு மாற்ற தொகுதிகளிலும் கிடைக்கும் என்று ஆம் ஆத்மியின் நம்பிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: குஜராத் தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் 5 பேருடைய சொத்துமதிப்பு ரூ.1200 கோடி

Last Updated :Nov 30, 2022, 4:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.