ETV Bharat / bharat

சொத்துக்கு ஆசைப்பட்டு 5 பேரை கொலை செய்த உறவினருக்கு வலைவீச்சு

author img

By

Published : May 23, 2021, 4:07 PM IST

Five of a family murdered in Ayodhya
அயோத்தி

லக்னோ: குடும்ப தகராறு காரணமாக, மூன்று குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொலை செய்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியிலுள்ள இனயாத் நகரில் வசித்து வந்த ரமேஷுக்கும், அவரது மருமகன் பவனுக்கும் இடையே சொத்து தகராறு நெடுங்காலமாக இருந்துள்ளது. ரமேஷ் வீட்டில் தான் பவனும் வசித்துவந்தார்.

இந்தநிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி சொத்து தொடர்பாக வாக்குவாதம் நடந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த பவன், நேற்றிரவு (மே.22) தனது மாமா ரமேஷ், அவரது மனைவி ஜோதி மற்றும் அவரது குழந்தைகள் மூவரையும் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், அங்கிருந்து பவன் தப்பியோடியுள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் பவனை விரைந்து கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக, அயோத்தியின் எஸ்.எஸ்.பி சைலேஷ் பாண்டே தெரிவித்துள்ளார். கொலையானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூராய்விற்காக அனுப்பப்பட்டுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.