ETV Bharat / bharat

புதுச்சேரியில் மீனவர்கள் போராட்டம்

author img

By

Published : Sep 29, 2022, 4:30 PM IST

புதுச்சேரியில் குபேர் அங்காடியில் மீன்கள் ஏலம் விடவும், விற்பனை செய்யவும் மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கக் கோரி ஏராளமான மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Etv Bharat
Etv Bharat

புதுச்சேரியில் உள்ள குபேர் மீன் அங்காடியில் நாள்தோறும் மீன் பிடித்துறைமுகங்களில் இருந்து கொண்டு வரப்படும் மீன்களை காலை நேரத்தில் ஏலம் விடுவதற்கு விதிக்கப்பட்ட தடையைத் திரும்பப் பெறக் கோரி, இன்று (செப்.29) சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் நேரு வீதி மற்றும் காந்தி வீதி சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல், போக்குவரத்து பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களிடம் சமாதானம் செய்து மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதிமொழி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்தனர்.

புதுச்சேரியில் மீனவர்கள் போராட்டம்
புதுச்சேரியில் மீனவர்கள் போராட்டம்

முன்னதாக, அப்பகுதியில் மீன் கழிவுகளை சாலையில் சுத்தம் செய்யாமல் பராமரிப்பின்றி விடுவதால், நேரு வீதியில் துர்நாற்றம் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் வரும் 1 ஆம் தேதி முதல் மீன்கள் ஏலம் விடக்கூடாது, மொத்த வியாபாரம் செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்பின் ஊர்வலம் பேரணிக்கு அனுமதி கிடையாது - தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.