கங்கனா ரணாவத் மீது சீக்கிய அமைப்பின் தலைவர் புகார்!

author img

By

Published : Nov 21, 2021, 3:16 PM IST

Updated : Nov 21, 2021, 4:56 PM IST

Kangana Ranaut
Kangana Ranaut ()

வேளாண் சட்டங்கள் திரும்ப பெற்ற விவகாரத்தில் சீக்கியர்களை இழிவாக பேசி அவமதித்ததாக நடிகை கங்கனா ரணாவத் (Kangana Ranaut) மீது சீக்கிய அமைப்பு ஒன்றின் தலைவர் புகார் அளித்துள்ளார்.

டெல்லி : சர்ச்சை ராணி கங்கனா ரணாவத் மீது டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாக குழு தலைவரும் (Delhi Sikh Gurdwara Management Committee president), சிரோமணி அகாலிதளம் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான மஜிந்தர் சிங் சிர்சா (Manjinder Singh Sirsa) புகார் ஒன்றை அறிவித்துள்ளார்.

அந்தப் புகாரில், “விவசாய சட்டங்கள் திரும்ப பெற்ற விவகாரத்தில் விவசாயிகளை காலிஸ்தானிய பயங்கரவாதிகளுடன் தொடர்புபடுத்தி கங்கனா ரணாவத் பேசியுள்ளார். ஆகவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டிருந்தார்.

  • Manjinder Singh Sirsa also slammed the actor over her alleged derogatory remarks targeting Sikhs and said the government should take action against her.
    "She should either be put in mental hospital or in jail.
    https://t.co/E78mamk1ni

    — Manjinder Singh Sirsa (@mssirsa) November 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

நடிகை கங்கனா ரணாவத் அண்மையில் நாட்டின் விடுதலை குறித்து பேசியிருந்தார். அப்போது அவர், “நாட்டின் விடுதலையை பிச்சை” என்று இழிவுப்படுத்தினார் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும் என்றும் கண்டன குரல்கள் ஒலித்தன என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : கங்கனா ரணாவத் கருத்துக்கு பாஜக ஆதரவு!

Last Updated :Nov 21, 2021, 4:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.