ETV Bharat / bharat

Cyclone Biparjoy: குஜராத்தை நெருங்கும் பிப்பர்ஜாய் புயல்.. அலர்ட் நிலையில் அரசு!

author img

By

Published : Jun 12, 2023, 4:22 PM IST

Etv Bharat
Etv Bharat

பிப்பர்ஜாய் புயல் குஜராத் மாநிலத்தை நெருங்கி வரும் நிலையில் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் வெள்ள தடுப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

கட்ச்: தென் கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இந்த புயலுக்கு பெங்காலி மொழியில் பிப்பர்ஜாய் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வரும் 14ஆம் தேதி வரை வடகிழக்கு பகுதியை நோக்கி நகரும் இந்த பிப்பர்ஜாய் புயல், குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா, கட்ச் மற்றும் அதை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை மாண்ட்வி (குஜராத் கடற்பகுதி), கராச்சி (பாகிஸ்தான் கடற்பகுதி) இடையேயும் ஜகாவ் துறைமுகம் (குஜராத்) இடையே வரும் 15ஆம் தேதி பிற்பகல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: பேய்கள் நடமாட்டத்தை விசாரித்த காவல் அதிகாரி சஸ்பெண்ட்: கொள்ளை வழக்கில் நடவடிக்கை

இந்நிலையில் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் அதிகாரிகளுடன் பேசிய முதலமைச்சர், மக்களின் பாதுகாப்பையும், மருத்துவம், உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், பேரிடர் மீட்பு குழுக்கள், பம்பிங் இயந்திரங்கள் மற்றும் ஜெனரேட்டர்கள் உட்பட அத்தியாவசிய தேவைகளை கண்டறிந்து எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட ஆட்சியர்களை அவர் அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக பேரிடர் மேலாண்மை மற்றும் தயார்நிலை குறித்து முதலமைச்சர் பூபேந்திர படேல் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் பிப்பர்ஜாய் புயலின் தாக்கத்தை சமாளிக்க இந்திய விமானப்படை, கடற்படை, கடலோர காவல்படை, ராணுவம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என குஜராத் மாநில அரசு கேட்டுக்கொண்டிருந்தது. இதன் அடிப்படையில், NDRF-இன் ஏழு குழுக்கள் ஏற்கனவே நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

  • Cyclone Alert for Saurashtra & Kutch Coast: Orange Message. ESCS BIPARJPY at 0530IST of today over eastcentral & adjoining NE Arabian Sea near lat 19.2N & long 67.7E, about 380km SSW of Devbhumi Dwarka. To cross near Jakhau Port,Gujarat by noon of 15June. https://t.co/KLRdEFGKQj pic.twitter.com/bxn44UUVhD

    — India Meteorological Department (@Indiametdept) June 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அது மட்டுமின்றி, SDRF-இன் 12 குழுக்களும் மீட்பு பணிகளில் ஈடுபட தயார் நிலையில் உள்ளது. கட்ச் தீன்தயாள் துறைமுக ஆணைய அதிகாரிகள் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் அனைவரும் புயல் கரையை கடக்கும் வரை வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும் அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தெரு நாய்கள் கடித்து 10வயது சிறுவன் உயிரிழப்பு: மாற்றுத் திறனாளி குழந்தைக்கு ஏற்பட்ட சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.