ETV Bharat / bharat

இந்தியாவில் தொடர்ந்து குறைந்துவரும் கோவிட்-19 பாதிப்பு!

author img

By

Published : Dec 16, 2020, 1:13 PM IST

கடந்த 24 மணிநேரத்தில் 26 ஆயிரத்து 382 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் 387 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

COVID-19
COVID-19

ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் கோவிட்-19 தீவிரம் அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 26 ஆயிரத்து 382 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் 387 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கோவிட் - 19 தற்போதைய நிலவரம்:

இந்தியாவில் இதுவரை மொத்தம் 99 லட்சத்து 32 ஆயிரத்து 547 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்று லட்சத்து 32 ஆயிரத்து இரண்டு பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். 94 லட்சத்து 56 ஆயிரத்து 449 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 96 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 49 ஆயிரத்து 441 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்தபடியாக கர்நாடகாவில் 11 ஆயிரத்து 984 பேர், தமிழ்நாட்டில் 11 ஆயிரத்து 919 பேர், டெல்லியில் உயிரிழப்பு எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியுள்ளது.

பரிசோதனை நிலவரம்:

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (டிச. 16) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 10 லட்சத்து 85 ஆயிரத்து 625 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை மொத்தமாக சுமார் 15 கோடியே 66 லட்சத்து 46 ஆயிரத்து 280 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இலவச கரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த பிகார் அமைச்சரவை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.