ETV Bharat / bharat

ஆபாசப் படங்களை காட்டி சிறுவனை கடத்திய பெண் மீது போக்சோ வழக்கு

author img

By

Published : Jul 27, 2022, 7:34 PM IST

ஆபாசப் படங்களை காட்டி, 15 வயது சிறுவனை கடத்திச் சென்ற 30 வயது பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

COPS
COPS

ஆந்திரா: கிருஷ்ணா மாவட்டத்தில் 15 வயது சிறுவனை கடந்த 19 ஆம் தேதி முதல் காணவில்லை. இது தொடர்பாக சிறுவனின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்படி போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுவனை பெண்மணி ஒருவர் கடத்திச் சென்றது தெரிய வந்தது. சிறுவனின் எதிர் வீட்டில் வசித்து வந்த 30 வயதான ஸ்வப்னா என்ற பெண்மணி, சிறுவனுக்கு ஆபாசப் படங்களை காட்டி, அவனுடன் நெருங்கிய உறவில் இருந்ததாகவும், பின்னர் சிறுவனை மூளைச் சலவை செய்து, கடத்திச் சென்று ஹைதராபாத்தில் தங்கியிருந்தாகவும் தெரிகிறது.

அவர்களின் இருப்பிடத்தை அறிந்த போலீசார், சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுவனை கடத்திச் சென்ற ஸ்வப்னா மீது கடத்தல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:'என்னை கட்டாயப்படுத்தி திருநங்கையாக மாற்றிவிட்டார்கள்..!' - திருநங்கையின் திடுக்கிடும் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.