ETV Bharat / bharat

100-வது நாளை தொட்ட இந்திய ஒற்றுமை யாத்திரை: ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு

author img

By

Published : Dec 15, 2022, 6:41 PM IST

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையின் 100-வது நாளை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்திக்கு, பாரம்பரிய உடை அணிந்த கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தோஷா: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடு தழுவிய இந்திய ஒற்றுமை யாத்திரையில் ஈடுபட்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் தொடங்கிய யாத்திரை 100-வது நாளை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலத்தில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டுள்ளார். தோஷா மாவட்டத்தில் பாத யாத்திரை சென்ற ராகுல் காந்தி, திட்வானா பகுதியில் உள்ள விவசாயிகளிடம் கலந்துரையாடி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

தொடர்ந்து சலீம்பூர் உள்பட 23 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கிராமங்களுக்கு ராகுல் காந்தி யாத்திரை சென்றார். பாரம்பரிய உடை அணிந்து, மேள தாளங்களுடன் கிராம மக்கள் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பாதயாத்திரையில் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், சச்சின் பைலட் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மானுடன் தர்ஹா சென்ற நடிகர் ரஜினிகாந்த் - வீடியோ வைரல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.