ETV Bharat / bharat

பாரத் ஜோடா யாத்ரா... குருத்வாரா சென்ற ராகுல் காந்தி!

author img

By

Published : Nov 8, 2022, 10:19 AM IST

பாரத் ஜோடா யாத்ராவுக்கு நடுவே குருத்வாரா சென்ற ராகுல் காந்தி!
பாரத் ஜோடா யாத்ராவுக்கு நடுவே குருத்வாரா சென்ற ராகுல் காந்தி!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடா யாத்திரைக்கு இடையே குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலம் குருத்வாராவில் வழிபாடு செய்தார்.

மகாராஷ்டிரா: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேசிய ஒன்றுமையை வலியுறுத்தி பாரத் ஜோடோ யாத்திரை(Bharat Jodo Yatra) என்ற பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா வழியாக தெலங்கானா மாநிலத்தை நிறைவு செய்துள்ளது.

திங்கட்கிழமை இரவு தெலங்கானாவில் யாத்திரையை முடித்த ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் நான்டெக் பகுதியில் இன்று ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கினர்.

  • महाराष्ट्र में यात्रा की शुरुआत, गुरपुरब के शुभ अवसर पर गुरुद्वारा यादगारी बाबा ज़ोरावर सिंह जी, फतेह सिंह जी में अरदास से की।

    गुरु नानक जी के प्रेम, शांति और भाईचारे की सीख को दिल से लगाकर हम भारत जोड़ने का यह संकल्प पूरा करेंगे।

    सभी देशवासियों को गुरपुरब की लाखों बधाइयां। pic.twitter.com/WgWKmeGiWr

    — Rahul Gandhi (@RahulGandhi) November 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக, இன்று குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு குருத்வாராவுக்கு சென்ற ராகுல் காந்தி, சமத்துவத்தை வலியுறுத்தி பிரார்த்தனை செய்தார். இது தொடர்பான புகைப்படங்களை ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • महाराष्ट्र में यात्रा की शुरुआत, गुरपुरब के शुभ अवसर पर गुरुद्वारा यादगारी बाबा ज़ोरावर सिंह जी, फतेह सिंह जी में अरदास से की।

    गुरु नानक जी के प्रेम, शांति और भाईचारे की सीख को दिल से लगाकर हम भारत जोड़ने का यह संकल्प पूरा करेंगे।

    सभी देशवासियों को गुरपुरब की लाखों बधाइयां। pic.twitter.com/WgWKmeGiWr

    — Rahul Gandhi (@RahulGandhi) November 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக தெலங்கானாவில் யாத்திரையை முடித்த ராகுல் காந்தி, ”இந்தியாவின் உண்மைநிலை என்னவென்றால் ஒருபுறம் பணவீக்கம், மறுபுறம் வேலையில்லா திண்டாட்டம் என தவித்து வருகிறது” என மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.

அடுத்த 15 நாட்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் ராகுல் காந்திசுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. செவ்வாய்கிழமை காலை பிலோலி மாவட்டத்தில் உள்ள அட்காலிக்கு செல்லும் ராகுல் காந்தி, கோதாவரி சர்க்கரை ஆலை மைதானத்தில் இரவு தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.