புதுச்சேரி: மிஷன் வீதியில் உள்ள தனியார் சாக்லேட் கடையில் கடந்த 10 ஆண்டுகளாக சாக்லேட்டால் காந்தியடிகள், பிரபலங்களான இந்திய விமானப்படை பைலட் அபிநந்தன், ரஜினிகாந்த், பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோரின் உருவ சாக்லேட் சிலை உருவாக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் பல முக்கியப் பிரமுகர்கள், தலைவர்களின் சாக்லேட் சிலை உருவாக்கப்பட்டுவருகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகை நாள்களில் இவ்வாறு செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு 6.5 அடி உயரம்கொண்ட மகாகவி பாரதியார் சாக்லேட் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
482 கிலோ எடை கொண்டதாக உள்ள இந்தச் சிலை, முழுக்க சாக்லேட் கொண்டு தயாரிக்கப்பட்டது. மேலும், பாரதியின் வரிகளான ’நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?’ என்ற சொல்லும் எழுதப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒமைக்ரானின் தன்மைகள் குறித்து மருத்துவர் அண்ணாமலை விளக்கம்